animated gif how to
Showing posts with label breaking news. Show all posts
Showing posts with label breaking news. Show all posts

நாட்டில் ஹலால் சான்றிதழுக்கு எதிராகவும் பிரசாரம்

November 20, 2012 |

-அம்றித்-

ஹலால் சான்றிதழ் சிங்கள மக்கள் மீது திணிக்கப்படுவதாகவும் ஹலால் குறியீட்டுடன்கூடிய பொருட்களை சிங்கள மக்கள் புறக்கணிக்குமாறும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் வேண்டுகோள்விடுத்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

பந்தயக்காரர்களுக்கு வரிச்சலுகை! நோன்புக்கு அன்பளிப்பாக கிடைத்த பேரீச்சம் பழத்துக்கு வரி

November 11, 2012 |

பந்தயக்காரர்களுக்கு வரிச்சலுகை அளித்துள்ள அரசாங்கம் முஸ்லிம்களின் விசேட நோன்பு காலத்தில் வெளிநாடுகளிலிருந்து அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்ற பேரீச்சம்பழங்களுக்கு 90 லட்சம் ரூபாவை வரியாக அறவிட்டுள்ளது.

லிபியாவில் இஸ்லாத்தை இழிவுப்படுத்தும் திரைப்படம்: முஸ்லிம்கள் கொந்தளிப்பு

September 12, 2012 |

இஸ்லாத்தையும், முஸ்லிம்கள் உயிரினும் மேலாக கருதும் இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் அவமதிக்கும் விதமாக அமெரிக்காவில் இருந்து வெளியான திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக லிபியாவில் ஆவேசமடைந்த மக்கள் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதலில் தூதரக அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற கிராமத்தில் தீ வைப்பு

September 04, 2012 |

- இர்ஷாத் றஹ்மத்துல்லா -

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மறிச்சுக்கட்டி மரைக்கார் தீவு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டில்கள் மற்றும் பொதுக் கட்டிடம் என்பனவற்றின் மீது நேற்று இரவு தீவைப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதன் போது 7 தற்காலிக கொட்டில்களும் ஒரு பொது நோக்கு மண்டபமும் தீயில் எரிந்து சாம்பளாகியுள்ளது.

கிழக்குத் தேர்தல்: முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு

July 18, 2012 |


(றிப்தி அலி) -TM
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக, கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பலஸ்தீன தலைவர் யாஸிர் அரபாத் விஷம் கொடுத்து கொலைச் செய்யப்பட்டார்..!

July 04, 2012 |

பலஸ்தீன் தலைவர் யாஸிர் அரபாத்தின் மரணம் கொடிய விஷம் உடலில் செலுத்தப்பட்டு நிகழ்ந்ததாக அல்ஜஸீராவின் புலனாய்வு அறிக்கை கூறுகிறது. ஒன்பது மாதங்களாக நீண்ட புலனாய்வின் இறுதியில் பலஸ்தீனின் புகழ்பெற்ற தலைவரான யாஸர் அரபாத்தின் மரணம் இயற்கையானது அல்ல என்ற உண்மையை அல்ஜஸீரா கண்டுபிடித்துள்ளது.

எகிப்திய குடியரசின் முதலாவது உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக கலாநிதி முர்ஸி வெற்றி

June 24, 2012 |

எகிப்திய குடியரசின் ஜனாதிபதி தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமீனின் ப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ்(FJP) கட்சியின் வேட்பாளரான கலாநிதி முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக எகிப்து தேர்தல் ஆணையம் ‌உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எகிப்து ஜனாதிபதி தேர்தல்: முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வேட்பாளர் கலாநிதி மூர்ஸி வெற்றி

June 18, 2012 |

எகிப்து ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் அநேக இடங்களில் முடிவுக்கு வந்துள்ளன. இதன் பிரகாரம் கலாநிதி முர்ஸி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(வீடியோ இணைப்பு)

தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசலில் தொழுகை நடாத்த அனுமதி மறுப்பு..!

May 28, 2012 |

தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸா தொடர்பாக முஸ்லிம் தரப்புக்கும், ஆர்பாட்டகாரர்கள் தரப்புக்கும் இடையில் பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, 27 ஆம் திகதி மாலை தொடக்கம் நீண்ட நேரமாக இடம்பெற்றது.

தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மத்ரசாவிற்கு எதிராக பிக்குகள் ஆர்ப்பாட்டம்..!(படங்கள் இணைப்பு)

May 25, 2012 |


தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வலப்புறம் செலும் கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருர் ரஹ்மான் பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து அதே பிரதேசத்தில் அமைந்திருக்கும் கல்விஹாரவில் இருந்து புறப்பட்ட ஆர்ர்ப்பாட்டம் ஒன்று சற்று முன்னர் (பி. ப. 5:30 அளவில்) மிருக்கக்காட்சி சாலை கல்விஹார பிளேஸ் சந்தியில் நிலைகொண்டிருந்தது.(படங்கள் இணைப்பு)

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நிபந்தனையுடன் பிணையில் விடுதலை

May 18, 2012 |

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்ற படைவீரர்களுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றில் சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது ஆரோக்கியமானதல்ல: ஜம்இய்யத்துல் உலமா

May 11, 2012 |

இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த வேதனையை தெரிவிக்கும் அதேவேளை, இதனை மிக வன்மையாகக் கண்டிக்கிறது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள் ஆர்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)

May 07, 2012 |


களுத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள் இன்று திங்கட்கிழமை, மே, 7 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலில் இன்று ஜும்ஆ தொழுகை நடைபெற்றது (படங்கள் இணைப்பு)

April 27, 2012 |

ஜும்மாத் தொழுகையை நடத்த விடாது தடுக்கப்பட்ட தம்புள்ளை மஸ்ஜிதுல் கைரியா ஜும்மாப் பள்ளிவாயலில் இன்று எவ்வித பிரச்சினையுமின்றி ஜும்மாத் தொழுகை நடத்தப்பட்டுள்ளது. 

இறை இல்லம் சேதப்படுதியதை கண்டித்து கிழக்கு மாகாணத்தில் இன்று பூரண ஹர்த்தால்! (படங்கள் இணைப்பு)

April 26, 2012 |

தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து அம்பாறை,மட்டகளப்பு மாவட்டங்களில் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன. காத்தான்குடி ,கல்முனை, சம்மாந்துறை பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

தம்புள்ள மஸ்ஜித் - முஸ்லிம்கள் ஹர்த்தால் செய்வதாயின் வரம்பு மீறாமல் செயற்படுங்கள் ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

April 25, 2012 |

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலையடுத்து முஸ்லிம்கள் மிகுந்த கவலையிலும் சமூக ஒற்றுமை சீர்குலைந்து விடுமோ என்ற அச்சத்திலும் இருந்து வருகின்றனர். சிலர் மேற்படி விடயத்தை கண்டிக்கவும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று தூண்டிக் கொண்டும் இருக்கின்றனர்.

அல்லாஹ்வின் இல்லம் மீதான தாக்குதல் - முஸ்லிம் நாடுகள் கொதிப்பு!

April 24, 2012 |

உதயன்
தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகள் பலத்த கண்டனத்தையும், கடும் விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.

அத்துடன், குறித்த அரபு நாடுகள் இலங்கையிலுள்ள தமது நாட்டுத் தூதுவர்களிடம் பள்ளி வாசல் தாக்குதல் தொடர்பிலான முழு விவரங்களையும் திரட்டி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளன.

தம்புள்ள பள்ளிவாயல் ஆறு மாத காலத்திற்குள் அகற்றப்படல் வேண்டும்- தேரர்களின் புதிய காலக்கெடு!

April 23, 2012 |


தம்புள்ளயிலுள்ள பள்ளிவாயல் ஆறு மாத காலத்திற்குள் அகற்றப்படல் வேண்டுமென இன்று தம்புள்ளையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வமத ஆலோசனை கூட்டத்தில் தம்புள்ள மஸ்ஜித் நிர்வாகம் கலந்துகொள்ளாது

|

தம்புள்ள மஸ்ஜித் தொடர்பாக எழுந்துள்ள பதற்ற நிலையை தணிப்பதற்காக சர்வமதத் தலைவர்களைக் கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று திங்கள் கிழமை தம்புள்ளையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ள மாநகர சபையின் மேயர் ஜாலிய ஒபாத்த தெரிவித்துள்ளார்.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முஸ்லிம் மதத் தலைவர்கள் அஸ்கிரிய மாநாயக்க தேரர் , புத்த சாசன திணைக்கள செயலாளர் ,கலாசார அமைச்சின் செயலாளர் தம்புள்ள விகாராதிபதி மற்றும் அரசியல்வாதிகள் பிரதேச செயலாளர் இந்த கூட்டத்தில் எழுதுள்ள பிரச்சினைகள் குறித்து உரிய வகையில் இவ் ஆலோசனைக் கூட்டத்தில் ஆராயப்பட்டு இந்த பிரதேச முஸ்லிம்கள் உரிய வகையில் தங்கள் பள்ளிவாசல் சமைய விவகாரங்களை முன்னெடுத்து செல்ல வசதியாக மாற்று நடவடிக்கை எடுக்க எதிர்பார்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேண்டுமானால் பள்ளிவாசலை தரை மட்டமாக்கு, வேறிடம் செல்ல மாட்டோமென உறுதி..!

|

-எம்.ஏ.எம்.நிலாம்-
தம்புள்ளயில் பௌத்தர்கள் உரிமை கொண்டாடும் புனித பூமிக்கு அப்பால் பிரிதொரு இடத்தில் காணி ஒதுக்கப்பட்டு 6 மாதங்களுக்கு இடையில் புதிதாக பள்ளிவாசல் கட்டித் தரப்படும்  எனவும் உடனடியாக முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் பிரதமர் டி.எம்.ஜயரட்ண முஸ்லிம் தரப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  அவசரக்கூட்டம் ஒன்றை அதன் தலைமையகத்தில் கூட்டியது. இதில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்அமைச்சர்கள், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

Flag Counter

Free counters!