animated gif how to

இறை இல்லம் சேதப்படுதியதை கண்டித்து கிழக்கு மாகாணத்தில் இன்று பூரண ஹர்த்தால்! (படங்கள் இணைப்பு)

April 26, 2012 |

தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து அம்பாறை,மட்டகளப்பு மாவட்டங்களில் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன. காத்தான்குடி ,கல்முனை, சம்மாந்துறை பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

 
பாடசாலைகள்.வர்த்தக நிலையங்கள்.அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் முடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. பாடசாலை சென்ற மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு திருப்பி வந்துள்ளனர்.

நகர் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



 கல்முனை

காத்தான்குடி


சம்மாந்துறை (படங்கள் TAMIL MIRROR)




0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!