animated gif how to
Showing posts with label articles. Show all posts
Showing posts with label articles. Show all posts

இலங்கை ஜம்மியத்துல் உலமா விவகாரம் சொல்லும் உண்மைகள்..!

August 13, 2013 |

ப்பிள் போன்களை ஏந்த துடிக்கும் கரங்கள், கலக்க்ஷி கனவுகளில் மிதக்கும் உள்ளங்கள்.

பதுளையில் நடப்பது என்ன? வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்

November 28, 2012 |

-மௌலவி HMM.இர்ஷாத்-
கடந்த 2012-08ம் மாத இறுதியில் ஒரு துண்டுப் பிரசுரம் பதுளை நகரில் வாழும் சிங்கள மக்களுக்கு மத்தியில் வினியோகிக்கப்பட்டிருந்தது .அதில் முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள், அவர்களுக்கு காணிகள் விற்காதீர்கள் 2001ம் ஆண்டு 7 வீதமாக இருந்த முஸ்லிம்கள் 2011ல் 14 வீதமாகி விட்டார்கள். 2021ல் 25-30 வீதமாகி விடுவார்கள். 2031ல் 50-60 வீதமாகி நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவார்கள் என்றும் இன்னும் பலவிடயங்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

முறாசிலிடமிருந்து…ஸர்மிளாவுக்கு ஒரு திறந்த மடல்!

November 23, 2012 |

அன்பின் சகோதரி,முதலில் அல்லாஹ்தஆலா உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் ஹிதாயத்தை நஸிபாக்கவேண்டுமென உளப்பூர்வமாக பிரார்த்தித்தவனாக இந்த மடலை வரைகின்றேன்நீங்கள் BBC செய்திச் சேவைக்கு கூறிய கருத்தும், அதனைத் தொடர்ந்து நீங்கள் கூறிய கருத்துக்கு கொடுத்த விளக்கமும் (ஈமானிய இதயங்கள்) எல்லோருக்கும் போல எனக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறகு முளைத்த சர்மிளா செய்யத்தின் விபச்சார அங்கீகாரம்

November 21, 2012 |

-சுபைர் மிரான்-

ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிளா செய்யத் என்ற பெண் எழுத்தாளர் (?) எழுதிய 'சிறகு முளைத்த பெண்' எனும் கவிதை நூல் வெளியீட்டு வைபவம் சென்ற 18.11.2012, ஞாயிற்றுக்கிழமை மாலை 04.15 மணிக்கு டீ. ஆர். விஜேவர்த்தன மாவத்த, கொழும்பு 10 இல் அமைந்துள்ள தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கருமலையூற்று கிராமமும் கிழக்கு மாகாண சபையின் தீர்மானமும்

November 09, 2012 |

-மூதூர் முறாசில்-

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்திருக்கும் ஒரு கிராமமே கருமலையூற்று கிராமமாகும். இக்கிராம மக்கள் நீண்ட காலமாக சில பிரச்சினைகளை சுமையாக சுமந்து கொண்டு நிற்கின்றனர். இப்போது அம்மக்களது சுமையில் கிழக்கு மாகாண சபை ஏகமனதாக எடுத்த தீர்மானத்தின் மூலம் பாரிய பங்கெடுத்துள்ளது.

கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாடசாலைகள் - அதிர்ச்சி தரும் பெறுபேறுகள்

November 01, 2012 |

-ஜெஸா-

கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி குறித்த கவனஈர்ப்பு முக்கிய தலைப்பாக கடந்த சில வருடங்களாக பதிவாகி வருகின்றது.

வெற்றிபெற்ற திவிநெகும சட்ட மூலமும் தோல்வியுற்ற சிறுபான்மை மக்களின் அபிலாசைகளும்!

October 04, 2012 |

-மூதூர் முறாசில்-

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட  அனைத்து மாகாண  சபைகளினதும் ஒப்புதலைப் பெற்றநிலையில்    பாராளுமன்றம்  செல்ல விருக்கும்         ஓரு சட்டமூலம்தான் திவிநெகும   சட்டமூலமாகும். இச்சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் வெற்றி பெற்றபோதும்  சிறுபான்மை மக்களின் அபிலாசைகள் தோல்வியுற்றதாகவே பலரும் கருதுகின்றனர்.

இஸ்லாமிய விரோதிகளின் சதித்திட்டங்களை ஒன்றிணைந்து தோற்கடிப்போம்

September 21, 2012 |

-மூதூர் முறாசில்-

அமெரிக்காவில் சற்குண சீலரின்-தூதரின் குணவொழுக்கத்தை சிதைத்து சித்தரித்து காணொளியாக காட்சிப்படுத்தியதைத் தொடர்ந்து முஸ்லிம்களது உணர்வுகள் கொதித்தெழுந்து கொண்டிருக்கம் இவ்வேளையில் பிரான்ஸ் பத்திரிகையொன்றில் நபிகளார் பற்றிய கேளிச்சித்திரம் பிரசுரமாகி பிரச்சினையை மேலும் சூடேற்றியுள்ளது.

லிபியாவில் அமெரிக்க ராஜ தந்திரிகள் கொலை: சியோனிச நலன்களுக்காக காவு கொடுக்கப்படும் அமெரிக்கா

September 20, 2012 |

(மூலக்கட்டுரை: லதீப் பாறூக் / தமிழுருவம்: KWC)

லிபியாவுக்கான அமெரிக்க தூதுவர் கிறிஸ்தோபர் ஸ்டீவன்ஸ் மற்றும் அவருடன் பணியாற்றிய மூன்று இராஜதந்திரிகள் லிபியாவின் பெங்காழி நகரில் அமைந்துள்ள லிபியாவுக்கான அமெரிக்க தூதரக செயலகத்தில் வைத்து கிளர்ந்தெழுந்த ஆர்ப்பட்டக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் ஒரு நீங்கா தடம் பதித்தவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்

September 15, 2012 |

-ஏ.அப்துல் பழீல்-

இலங்கைவாழ் முஸ்லிம்களை பொறுத்தவரையில் செப்டம்பர் 16ஆம் நாள் மறக்க முடியாத தினமாகும். 1980களிற்கு முன்னர் பேரினவாத அரசியல் கட்சிகளை நம்பியிருந்த இலங்கைவாழ் முஸ்லிம்களின் தனித்துவத்தை பேணுவதற்காக உருவாக்ககப்ட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் இவ்வுலகினை விட்டு பிரிந்த தினமாகும்.

தேர்தலும் முஸ்லிம்களது அபிலாசைகளும் !

September 14, 2012 |


-மூதூர் முறாசில்-

ஏனைய இரு மாகாணங்களோடு கிழக்கு மாகாணத்திலும் தேர்தல் ஒருவாறு நடந்து முடிந்து விட்டது. தேர்தல் முடிந்த போதும் தேர்தலுக்காக இடம்பெற்ற பிரசார யுத்தத்தின் சத்தங்கள் இன்னும் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன. அந்தவகையில்,‘எந்தப் பள்ளிவாசலும் இந்த அரசாங்கத்தில்; உடைக்கப்படவில்லைஎன்னும் வாசகம் தொட்டு மனிதர்ளை வணங்க முடியுமெனில் பௌத்த பிக்குகளை வணங்குவேன்என்னும் வாசகம் வரை பொறுப்பு வாய்தவர்கள் பொறுப்புடனோ என்னவோ கூறிய கருத்துக்கள் இலகுவில் மறக்க முடியாதவைகளாகும்.

“நோம்பி அரிண்ட துன்ன னே மச்சான் ” ஓரு சகோதர இன நண்பரின் வாக்கு மூலத்திலிருந்து…

August 17, 2012 |

-மூதூர் முறாசில்-

ஒரு பிரதேசத்தில் முக்கியமான பொறுப்பிலிருக்கும் சகோதர சிங்கள இனத்தைச் சேர்ந்த நண்பர் ஓருவர் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு (கடந்த திங்கட் கிழமையன்று) பேசினார். அப்போது அப்பகுதியில் நடந்த ஓரு அரசியல் நிகழ்வு பற்றி தனது ஆதங்கத்தை நண்பர் என்ற உரிமையுடன் என்னிடம் கொட்டித் தீர்த்தார்.குறித்த அந்த நண்பர் இஸ்லாமும் முஸ்லிம்களும் நல்லவர்கள்என்ற அபிப்பிராயத்தைஉடையவர்.

இலங்கையில் இஸ்லாம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கமா..?‏

August 09, 2012 |

- யு.  எச். ஹைதர் அலி -

எமது நாட்டில் வாழும் பெரும்பான்மை இனமும் ஏனைய சிறுபான்மை இனங்களும் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை பற்றி தவறான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதற்கு இந்த நாட்டில் ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழும் முஸ்லிம்கள் விட்ட தவறுதான் என்னஏன் எம்மைப்பற்றி இந்த தப்பபிப்பிராயங்களும் எமக் எதிரான காழ்ப்புணர்ச்சிகளும்.?

மூதூர் ஜபல் நகர் மலையும்‌ புத்தர் சிலையும் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயின் செல்லாப் பேச்சும்! (படங்கள்)

August 06, 2012 |

-மூதூர் முறாசில்-

மூதூர் பிரதேசத்திலுள்ள ஜபல் நகர் மலைப்பகுதியில் பௌத்த விஹாரையோ புத்தர் சிலையோ ஒரு போதும் அமைக்கப்படமாட்டாது. சகல இனங்களுக்கும் பொதுவான அம்மலையை ஒரு மதத்தவரது வழிபாட்டுக்கு    அரசாங்கம் வழங்காது. அம்மலைப்பகுதியில் தொல்பொருள் சான்றாதாரங்கள் இருப்பின் அதனைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு மட்டுமே சிலருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது…”

தேர்தல் வேலைகள் ‘நல்லமல்களை’ குறைக்குமா?

July 22, 2012 |

-மூதூர் முறாசில்-

புனித நோன்பு காலத்தில் மாகாண சபைக்கான தேர்தல் காலமும்சங்கமித்து விட்டது. இருந்தபோதும் பெருநாளுக்கும் தேர்தல் தினத்திற்கும் இடையில் சுமார் 20 நாட்கள் போதிய இடைவெளியும் இருக்கின்றது. இதனால் நோன்பு காலத்தில் தேர்தலும் வந்துவிட்டதே, என்ன செய்வதுஎன்று ஈமானிய இதயங்கள் சங்கடப்படாது திட்டமிட்டுச் செயற்படலாமல்லவா..?

மியன்மாரில் கொடூரமாக கொன்றொழிக்கப்படும் முஸ்லிம்கள் தட்டிக்கேட்க யாருமில்லை..?

July 21, 2012 |

-மூதூர் முறாசில்-

ஆரம்பத்தில் இந்திய பெருநிலப்பரப்பில் ஒரு பகுதியாக இருந்து பின்பு பிரிந்து சென்ற ஓரு தென்கிழக்காசிய நாடே பர்மாவாகும்.  இது 1989ல் ஐக்கிய மியன்மார்என தன்பெயரை மாற்றிக் கொண்டது. இந்நாடு நமது இலங்கை நாட்டைக் காட்டிலும் சரியாக ஒருமாதத்திற்கு முன்னர் 1948 ஜனவாரி  மாதம் 4ஆம் திகதி பிருத்தானியாவிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது.

வெள்ளை மணல் கருமலையூற்றுப் பள்ளிவாசலில் தொழுவதற்கான அவா நிறைவேறுமா..?

July 12, 2012 |

- மூதூர் முறாசில்-

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வெள்ளை மணல் கிராம உத்தியோகத்தர் பகுதியில் அமைந்திருக்கின்ற ஒரு அழகான கிராமமே கருமலையூற்று முஸ்லிம் கிராமமாகும். இக்கிராமம் உலகப் பிரசித்தமான திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தின் மேற்குப் பக்கமாக அமைந்திருக்கின்றது. மனதைக் கவரும் இயற்கை எழில் கொஞ்சும் இக்கிராமத்தின் மலைப்பகுதியில் கம்பீரமாக அமைந்திருப்பது கருமலையூற்றுப் பள்ளிவாசலாகும்.

யா அல்லாஹ் இவர்களை மன்னித்து விடு..! – ‘மவ்பிம’ சிங்கள பத்திரிகையின் கட்டுரை தமிழாக்கம்

June 15, 2012 |

14-06-2012 விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரை: இலங்கையின் இன முரண்பாடு கூர்மையடைந் தமைக்கு ஊடகங்களும் கணிசமானளவு பங்களித்திருக்கின்றன என்ற உண்மையை நாம் மறந்துவிடுவதற்கில்லை.

இலங்கையில் இஸ்லாமியர்களை இலக்குவைக்கும் பேரினவாத சக்திகளும், வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டிய முஸ்லிம்களும்.!

June 11, 2012 |

அஷ்-ஷெய்க் கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ் நளீமி

பயங்கரவாதத்தின் வேர்கள் அறுபடவில்லை
  
கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டின் அமைதி சமாதனம் பொருளாதார சுபீட்சம் என சகல துறைகளையும் காவு கொண்டிருந்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தாலும், இனங்களுக்கிடையிலான நிரந்தர சமாதான சகவாழ்வு கிட்டிய எதிர்காலத்தில் உதயமாகும் என எவராலும் எதிர்வு கூற முடியாதுள்ளது. நன்கு ஆராயப்பட்ட அரசியல் தீர்வு ஒன்றின் அடிப்படையில்  இனங்களுக்கிடையில் நிரந்தர சமாதான சகவாழ்வு எட்டப்படும் வரைக்கும் "பயங்கரவாதம்"  ஒழிக்கப் பட்டுவிட்டதாக எந்த ஒரு சமூகமும் நிம்மதிப் பெரு மூச்சு விட முடியாது என்பதே உண்மை.

”இலங்கை விவகாரம்” – ஈமானிய உறுதியுடன் எதிர்கொள்வோம்

June 04, 2012 |

…………..திடீரென இந்தக் கோணத்தில் இனவெறி கொண்ட பௌத்தர்கள் குமுறுவதற்கான காரணம் என்ன எனச் சிந்தித்துப் பார்த்தால் ஒரு இரகசியம் அம்பலமாகின்றது………..

எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்
இலங்கை ஒரு அழகான பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த தீவு. இங்கு வாழும் மக்களும் பொதுவான மனித இயல்புகளில் முன்னேற்றம் கண்டவர்கள். இந்த அழகிய தேசத்தை மொழிவெறியும், இனவெறியும் சேர்ந்து இரத்தம் சிந்தும் பூமியாக மாற்றியது.

Flag Counter

Free counters!