அல்-குவைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன், கடந்த மே 2ம் தேதி, பாகிஸ்தான் அபோதாபாத்தில், அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, ஒசாமாவின் இடத்தை, யார் நிரப்பப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதனால் உலக நாடுகளால் தேடப்படும் ஒருவரான அய்மேன் அல் ஜாவாஹிரி, அல்-குவைதா அமைப்பின் புதிய தலைவரானார்.
இது பற்றி அமெரிக்க ராணுவ அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் அளித்த பேட்டியில், அல்-குவைதா தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள அய்மேன் அல் ஜாவாஹிரிக்கு, ஆதரவாளர்களை ஒன்று திரட்டி செயல்படும் திறன் இல்லை.
ஒசாமா பின்லாடனைப் போன்ற சாமர்த்தியம் இவருக்கு கிடையாது. அல்-குவைதா பயங்கரவாத அமைப்புக்கு அய்மேன் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து, அந்த அமைப்பு ஒசாமாவின் வழியைப் பின்பற்ற இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கிறது என்பது நினைவூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாகத்தான் இருக்கிறது என்பதும் தெரிகிறது, என்றார்.
RSS Feed
June 18, 2011
|


















