animated gif how to
Showing posts with label university. Show all posts
Showing posts with label university. Show all posts

தலைமைத்துவப் பயிற்சியை ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுக்கும் விஸ்தரிப்பு!

August 07, 2011 |


August 07,2011....AL-IHZAN Local News
பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு வழங்கப்படும் சர்ச்சைக்குரிய தலைமைத்துவப் பயிற்சியை இலங்கையில் உள்ள 16 உயர்கல்வி நிறுவனங்களுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்துக்கான தேசிய நிறுவகம் உள்ளிட்ட ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தெரிவானவர்களுக்கும் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள 16 உயர்கல்வி நிறுவனங்களுக்கு வருடாந்தம் மூவாயிரத்து ஐநூறு பேர் தெரிவாகின்றனர். அடுத்த வருடத்திலிருந்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு தெரிவானவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து ஐநூறு முதல்ஐயாயிரம் ஆக அதிகரிக்கப்படவுள்ளது.என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மாணவி மரணம்

August 05, 2011 |


August 05,2011....AL-IHZAN Local News
தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மாணவி மரணம் .இலங்கை அரசினால் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற தலைமைத்துவ பயிற்சியில் தியத்தலாவை இராணுவ முகாமில் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் கடந்த 29ம் திகதி மரணமடைந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் குறித்த இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து பதுளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையிலேயே மாணவி உயிர் இழந்து உள்ளார். உயிரிழந்தவர் நிசாந்தி மதுஷானி  வயது – 24 என்று தெரிவிக்கப்படுகின்றது ...

மாணவர் தலைமைத்துவப் பயிற்சியின் பின்னர் மேலும் ஒரு பயிற்சி

July 21, 2011 |

July 21, 2011.... AL-IHZAN Local News

தலைமைத்துவப் பயிற்சியை முடித்து கொண்ட பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்களுக்கு  மேலும் ஒரு பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி தலைமைத்துவப் பயிற்சி பெற்ற மாணவர்களின் ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவை மேலும் விருத்தியடையச் செய்வதற்கு விசேட பாடநெறியொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தலைமைத்துவப் பயிற்சி பெற்று வெளியேறிய முதலாவது தொகுதி மாணவர்களுக்கான பயிற்சிநெறி நேற்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது எனவும், இரண்டாம் தொகுதி மாணவர்களுக்கான பயிற்சிநெறி விரைவில் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ளார்...

தலைமைத்துவப் பயிற்சி:10 திகதி 3 ஆம் கட்டம் ஆரம்பம்(படங்கள் இணைப்பு)

July 06, 2011 |

July 06, 2011.... AL-IHZAN Local News
பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சிநெறியை பூர்த்திசெய்த 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களைக் கொண்ட இரண்டாவது தொகுதி மாணவர்கள் இன்று புதன்கிழமை வெளியேறுகின்றனர். நாடளாவிய ரீதியிலுள்ள 28 பயிற்சி முகாம்களிலிருந்து இவர்கள் இன்று வெளியேறுகின்றனர் ன்று உயர்கல்வி அமைச்சின் செயலாளர் டொக்டர்.சுனில் நவரட்ண தெரிவித்தார்.

மூன்றாவது தொகுதி மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. அதில் 780 மாணவர்கள் தலைமைத்துவப் பயிற்சி பெறவுள்ளனர். ரந்தம்பே மாணவர் படை பயிற்சிப் பாசறையில் நடைபெறவிருக்கும் தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தில் 600ற்கும் அதிகமானவர்கள் தமிழ்மொழி மூலமான மாணவர்கள் என்றும் அமைச்சின் செயலாளர் கூறினார்(படங்கள் இணைப்பு)....

இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?

June 14, 2011 |

June 14, 2011.... AL-IHZAN Local News
- அஸங்க சாயக்கார-
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,

தம்பியின் முகத்தைச் சற்றுப் பார்த்துக் கொள்ள எமது பாட்டி தொலைக்காட்சிப் பெட்டியை நெருங்கி விழிகளைக் கூர்மையாக்கிக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்று முறை க.பொ.உயர்தரப் பரீட்சையெழுதி மூன்றாம் முறை ஒரு வழியாக பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் அளவுக்கு தம்பி சித்தியடைந்தது சில நாட்களுக்கு முன்புதான். இப்பொழுது தம்பி ஒரு இராணுவ முகாமில் இருக்கிறான். அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க அன்பாகக் கற்றுத் தரும் இராணுவ ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளவே அவன் சென்றிருக்கிறான். இராணுவ ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச் சென்றிருக்கும் பையனின் முகத்தைச் சற்று தொலைக்காட்சியில் பார்த்திடவே பாட்டி காத்திருக்கிறார்....

முஸ்லிம் மாணவ மாணவியர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதா ?: பொறியலாளர் நிஷாத் பதில்

June 05, 2011 |

June 05, 2011.... AL-IHZAN Local News

இராணுவ முகாம்களில் வதிவிட தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் மாணவ மாணவியர் தொடர்பாக தற்போது முகாம்களில் சாதகமான நிலை ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் அரசியல் வாதிகள் சிலர் தாம் பல மணிநேரம் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்காவை சந்தித்து இது பற்றி பேசியுள்ளதாகதாகவும் அதன் பின்னர் முஸ்லிம் மாணவர்களின் விடையம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ள தகவில் பிரதியமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் மிக நீண்ட நேரம் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்காவுடன் கலந்துரையாடிய பின்னர் முஸ்லிம் மாணவ மாணவியர்களுடைய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பது எனவும், அவர்களுக்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது..........

தலைமைத்துவப் பயிற்சி:மாணவர்கள் 16 ஆம் திகதி பயிற்சி நிலையங்களுக்கு சமுகமளிக்க வேண்டும்

June 04, 2011 |

June 04, 2011.... AL-IHZAN Local News

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறி 18 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது என்று உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார் அதேவேளை பல்கலைக்கழக மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சியை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த 6 மனுக்களும் தலைமைத்துவ பயிற்சிக்கு உத்தரவிடுவதற்கு உயர் கல்வி அமைச்சருக்கு அதிகாரம் இருப்பதா கண்ட உயர் நீதிமன்றம் மனுக்களை நிராகரித்துள்ளது......

இராணுவ முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்க்கு பயிற்சி 3 மாத காலம் நீடிப்பு

May 31, 2011 |

May 31, 2011.... AL-IHZAN Local News

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு படைமுகாம்களில் தற்போது வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சிக்கான காலம் போதாமையினால், அடுத்த வருடத்தில் இருந்து இப்பயிற்சிக் காலத்தை இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை அதிகரிக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிக் கற்கைநெறிகளைப் பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற் றியபோதே, உயர்கல்வி அமைச்சர் திஸாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.அவர் தனது உரையில் மேலும்......

இராணுவ முகாம்களில் முஸ்லிம் மாணவர்களுக்கு சிக்கலா.? தொடர்பு கொள்ளவும்

May 27, 2011 |

May 27, 2011.... AL-IHZAN Local News

அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு ஒன்றில் இராணுவ முகாம்களில் நடைபெறும் தலைமைத்துவ பயிற்சியில் பங்குபற்றியுள்ள முஸ்லிம் மாணவ மணவியர் தொடர்பில் மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர் மாணவாகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தம்முடம் 0714812058, 0711117876/ 0776508220 ஆகிய கையடக்க தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கோரியுள்ளனர்.
பொதுவாக  ஐவேளைத் தொழுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஹலால் உணவு வழங்கப்படுவதாகவும்  குறிப்பா ரந்தனிகள இராணுவ முகாமில்  முஸ்லிம்களும் நிலை திருப்பிகரமாக இருப்பதாகவும் மாணவர்கள்  தகஜுத்   -நடுநிசி தொழுகை- கூட தொழுததாகவும் தெரிவித்துள்ளனர்.......................

குருடர்களாகவும் , ஊமைகளாகவும் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது கல் வீசவேண்டாம்

May 26, 2011 |

May 26, 2011.... AL-IHZAN Local News

இந்த வருடம் பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள 22 ஆயிரம் மாணவர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி நாட்டின் 28 முகாம்களில் நடாத்த தீர்மாணிக்கபட்டு முதல் கட்டத்தில் தெரிவான சுமார் 12 ஆயிரம் பேருக்கு நாட்டில் 28 முகாம்களில் மூன்று வாரகால வதிவிட தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்று கொண்டிருகின்றது.
இந்த பயிற்சி நெறி 18 இராணுவ முகாம்களிலும் 2 கடற் படை முகாமிலும் 2 விமான படை முகாமிலும் 4 காலால் படை முகாமிலும் 2 போலீஸ் முகாமிலும் இடம்பெறுகின்றது ஒரு முகாமிற்கு சுமார் 430 மாணவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது. மாணவர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி தொடர்பாக கருத்துரைத்துள்ள டாக்டர் அஷ்ஷேய்க் மசீஹுத்தீன் இனாமுல்லாஹ்..........

பல்கலைக்கழக மாணவரும், முஸ்லிம் அரசியல்வாதிகளின் மௌனமும்

May 22, 2011 |

May 22, 2011.... AL-IHZAN Local News

இராணுவ முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்காக பயிற்சிகள் மிட்டமிட்டவகையில் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இந்தப் பயிற்சியிலிருந்தும் முஸ்லிம் மாணவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் மாணவிகளுக்கு விதிவிலக்கு பெற்றுக்கொடுக்குமாறும் விடுக்கப்பட்ட அத்தனை கோரிக்கைளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய சட்டங்களையும், மற்றும் மாணவர்களுக்கு ஜும்ஆ செல்வதறகான வாய்ப்புகளும் வழங்கப்பட மாடட்டாதென தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்பயிற்சிநெறி குறித்து முஸ்லிம் பெற்றோர்கள் பெரும் கவலை கொண்டிருப்பதாக அறிய வருகிறது.

பயிற்சிநெறிக்கு செல்லாதுவிட்டால் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதியை தாம் பெறத்தவறி விடுவோம் என்ற அச்சமும் எமது முஸ்லிம் மாணவர்களிடம் மேலோங்கியுள்ளது. இவ்வாறு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமே இப்பயிற்சிநெறி குறித்து கவலை கொண்டுள்ள நிலை இதுவரை இவ்விவகாரம் குறித்து எந்தவொரு முஸ்லிம் அரசியல் வாதியும் ஆர்வம் செலுத்தாமலிருப்பது பெரும் கவலையை சமூக மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. எம் முஸ்லிம் அரசியல் வாதிகளை நினைத்து நாம் மீண்டுமொருமுறை நொந்து கொள்வதைத்தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லையென்றே தோன்றுகிறது.


பல்கலைக்கழக நுழைவு அனுமதி பெற்ற மாணவர்களுக்கான கட்டாய தலைமைத்துவப் பயிற்சி முகாம்களை ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்போவதாக இலங்கை உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  அவற்றை பின்போடுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் கேட்டிருந்தபோதிலும், அந்த பயிற்சிகளை தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி நடத்தப் போவதாக இலங்கை கல்வியமைச்சின் செயலாளர் சுனில் நவரட்ண....

படை முகாம்களில் வதிவிட பயிற்சி முஸ்லிம் மாணவிகளுக்கு பிரச்சினை

April 26, 2011 |

April 26, 2011.... AL-IHZAN Local News
முஸ்லிம் மாணவிகளுக்கு விதிவிலக்கு அளிக்குமாறு மாற்றுக் கொள்கைக்கான பல்கலைக்கழக மாணவர் சங்கம் வேண்டுகோள்

2010/2011 ம் ஆண்டிக்காக புதிதாக பல்கலைக்கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்காக உயர்கல்வி அமைச்சு மூனறுவார கட்டாய தலைமைத்துவ பயிற்சி நெறியொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சிநெறி முப்படைகளின் நெறிப்படுத்தலின் கீழ் படைமுகாம்களில் வதிவிட பயிற்சிநெறியாக நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இப்பயிற்சிநெறியானது பல்கலைக்கழக மாணவர்களிடையே தேசப்பற்றையும் சகவாழ்வையும் தலைமைத்துவ ஆளுமைகளையும் வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். பல்கலைக்கழகம் புகுமுன்னறே இவ்வாறான பயிற்சிநெறிகள் அளிக்கப்படுவது பல்கலைக்கழக வாழ்வில் ஒழுக்க நெறியுடனும் கட்டுக்கோப்புடனும் தனது கல்வி வாழ்கையைத் தொடர மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கின்றது.

Flag Counter

Free counters!