animated gif how to

தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மாணவி மரணம்

August 05, 2011 |


August 05,2011....AL-IHZAN Local News
தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மாணவி மரணம் .இலங்கை அரசினால் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற தலைமைத்துவ பயிற்சியில் தியத்தலாவை இராணுவ முகாமில் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் கடந்த 29ம் திகதி மரணமடைந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் குறித்த இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து பதுளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையிலேயே மாணவி உயிர் இழந்து உள்ளார். உயிரிழந்தவர் நிசாந்தி மதுஷானி  வயது – 24 என்று தெரிவிக்கப்படுகின்றது ...
இந்த மாணவி அசுத்தமான சூழலில் தங்கி இருந்தமையால் அசுத்தக்காற்றினை சுவாசித்ததன் காரணமாக சுவாசப் பையினுள் கிருமிகள் உட்சென்றமையால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பயிற்சிகள் இராணுவ, கடற் படை முகாம்கள் மற்றும் போலீஸ் பயிற்சிப் கல்லூரிகலிலேயே நடைபெறுகின்றன. அங்கு பல்வேறு இராணுவத்திற்குரிய பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
News:Lankamuslim

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!