animated gif how to

முஸ்லிம் பாடசாலைகள் விடுமுறைக்காக நாளை மூடப்படுகிறது

July 16, 2012 |

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்த பின் முஸ்லிம் பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்காக நாளை செவ்வாய்க்கிழமை 17ம் திகதி மூடப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ஜயரட்ண அறிவித்துள்ளார்.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக ஆகஸ்ட் 22ம் திகதி திறக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ், சிங்கள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஆகஸ்ட் 03ம் திகதி மூடப்பட்டு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக செப்டம்பர் 03ம் திகதி திறக்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.

இதேவேளை ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 26ம் திகதி இடம்பெறுமெனவும் க.பொ.த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 06ம் திகதி ஆரம்பமாகுமெனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஜயந்த புஸ்பகுமார அறிவித்துள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!