animated gif how to

முஸ்லீம், பௌத்த மதகுருமார், புத்திஜீவிகளை உள்ளடக்கிய நல்லிணக்க போரம்!

June 09, 2012 |

 -அஸ்ரப் ஏ ஸமத்-

நல்லிணக்க போரம் எனும் அமைப்பு நேற்று மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் தலைவர்களாக முன்னாள் அமைச்சர் எம்.எச்.முஹம்மத் சப்ரகமுவ பல்கழைக்கழகத்தின் உபவேந்தர் கம்புறு வஜிர தேரோ மற்றும் எட்வின் ஆரியதாச ஹசன் மௌலானா முன்னளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுலைமான் ஆகியோர் தலைமையில் இப்போரம் உருவாக்கப்பட்டது.

தம்புல்லை பள்ளிவசால் பிரச்சினைக்குப் பிறகு நாட்டில் உள்ள முஸ்லீம் பௌத்த மத சம்பந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணுதல், சமுகங்களுக்கிடையே நல்லென்னத்தை ஏற்படுத்துதல், மத சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டால் அவ் இடத்திற்குச் இப் போரத்தின் அங்கத்தவர்கள் சென்று தீர்வு கானுதல், முஸ்லீம் செறிவாக வாழும் இடங்களில் பௌத்த முஸ்லீம் நல்லிணக்க போரத்தின் கிளைகளை உருவாக்குதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

இதில் முஸ்லீம் பௌத்த மதகுருமார்கள் மற்றும் புத்திஜீவிகளையும் அங்கத்தவர்களாக சேர்த்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டன.




0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!