இணைப்பு-2: இலங்கை வானிலை அவதான
நிலையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் சுனாமி
தாக்கும் அபாயம் நிலவுவதால் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக
இருக்கும் படியும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. _
இணைப்பு-1:இலங்கையில் கொழும்பு உட்பட பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. சுமாத்திரா பகுதியில் 8.9 ரிஜிட்டர் அளவு அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நில அதிர்வு ஆய்வு மையம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதன்போது கொழும்பில் அலுவலக கட்டிடங்களை விட்டு பாதுகாப்பு கருது மக்கள் வெளிவந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்த நில அதிர்வு இலங்கையில் மட்டும் அல்லாது சுமாத்திரா தீவுகளை சூழவுள்ள பல நாடு களில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆரம்பத்தில் 8.9 ரிஜிடர் அளவு அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க USGS ஆய்வு மையம் தெரிவித்தது. தற்போது 8.7 நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment