animated gif how to

பொத்துவிலில் இராணுவத்தினர் சுட்டு ஒருவர் வபாத்: பலர் காயம்

August 12, 2011 |

August 12, 2011.... AL-IHZAN Local News

பொத்துவில் பிரதேசத்தில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் வபாத்தாஹியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். ஏ.எம்.மஹ்ஜூன் என்பரே கொல்லப்பட்டவராவார்.

நேற்றிரவு பிடிக்கப்பட்ட 4 மர்ம மனிதர்களையும் காட்டுமாறுகோரி பொதுமக்கள் போராட்டம் நடாத்தியபோது பொலிஸார் ஆர்ப்பாட்டகாரர்களை கலைப்பதற்கு கண்ணீர்புகை பிரயோகித்து துப்பாக்கி பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது குறித்த நபர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இன்றைய தினம் பொத்துவில் பகுதியில் ஹர்த்தாலும் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.

மர்மமனிதரால் காயப்படுத்தப்பட்ட பெண் தொடர்ந்தும் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

பிந்திய செய்தி:பொத்துவில் பிரதேசத்தில் பொலிஸார் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை 6 மணிவரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!