animated gif how to

மர்ம மனிதனின் தாக்குதலுக்குள்ளான முஸ்லிம் பெண் பரபரப்பு வாக்குமூலம்

August 13, 2011 |

August 13, 2011.... AL-IHZAN Local News
பொத்துவில் பிரதேசத்தில் மர்ம மனிதனால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் ஒருவர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பொத்துவில் 06ஆம் வட்டாரம் கே.பி.எம்.வீதியை சேர்ந்த ஜூனைதீன் ஆஸிக் (22வயது) என்ற பெண்னே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில்செய்துவரும் நிலையில் தனது தாய் தந்தையருடன் குறித்த பெண் வாழ்ந்துவருகின்றார். இது தொடர்பில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில், 


நேற்று இரவு 8.30 மணியளவில் நான் வெளியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றபோது என்னை யாரோ ஒருவர் திடிரென வீட்டில் மேல் பகுதியில் இருந்து தூக்கினர்...
அங்கு பார்த்தபோது உடம்பு எல்லாம் கறுப்பு நிறத்தையுடைய ஒருவன் என்னை பிடித்திருந்தான். நான் கத்த முனைந்தபோது எனது வாய்க்குள் விரலையோட்டினான். அப்போது அந்த விரலில் ஏதோ திரவம் தடவப்பட்டதை உணர்ந்தேன். 
அப்போது அவனது கையில் கூரான ஆயுதம் இருந்தது, நான் பல தடைவ முயற்சி செய்து கத்திய போது அயலவர்கள் வரவே என்னை அவன் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டான் என தெரிவித்தார்.

2 கருத்துரைகள் :

rns said...

we have to find out who motherfucker behind this group

பச்ச மண்ணு said...

யார் அந்த மர்ம மனிதன்?
இங்கே க்ளிக் பண்ணவும்
http://pachchamannu.blogspot.com/2011/08/2.html

Post a Comment

Flag Counter

Free counters!