animated gif how to

சோமாலியாவில் 32 இலட்சம் முஸ்லிம்கள் பட்டினியால் அவதி

August 06, 2011 |

August 06, 2011.... AL-IHZAN World News

சோமாலியாவின் மேலும் மூன்று பகுதிகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட வலயங்களாக ஐ. நா. அறிவித்துள்ளது.
கிழக்கு ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியால் அப்பகுதியில் வாழும் மக்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். இதில் சோமாலியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சோமாலியாவில் 3.2 மில்லியன் பேர் பஞ்சத்தால் வாடிவருகின்றனர்.


இதில் கடந்த ஜுலை 20 ஆம் திகதி தென் சோமாலியாவின் கடல் மற்றும் ஷபல்லே பகுதிகள் ஐ. நா. வினால் பஞ்ச வலயங்களாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஷபல் லேவின் பெல்காட் மற்றும் காடெல் பகுதிகள் மற்றும் தலைநகர் மொகடிஷ¤ ஆகிய இடங்களும் பஞ்ச வலயங்களாக ஐ. நா. நேற்று அறிவித்தது. இந்த பகுதியில் உள்ளோருக்கு உடனடி உதவிகள் அவசியம் என ஐ. நா. குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!