May 27, 2011.... AL-IHZAN World News
லிபிய பிரச்சினையில் சுமுகமான முடிவை ஏற்படுத்தவும், லிபியத் தலைவர் கடாபியை பத்திரமாக வெளியேற்றி, நிலையான அரசியல் சூழலை ஏற்படுத்தவும், தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமா அடுத்த வாரம் லிபியாவுக்குச் செல்ல இருப்பதாக, “டாக் ரேடியா 702” செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் நடந்த ஆபிரிக்க யூனியன் கூட்டத்தில், லிபிய விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், சில மணி நேரங்களிலேயே தோல்வியில் முடிவடைந்தன இதையடுத்து, இப்போது தென்னாபிரிக்க ஜனாதிபதி அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் சுமா லிபிய ஜனாதிபதி முகம்மது கடாபி பதவி விலகுவது தொடர்பான சமரசத்திட்டம் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார். துருக்கி அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அவர் இந்த முயற்சியில் ஈடுபடவுள்ளார்.
News: thinakaran
RSS Feed
May 27, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment