animated gif how to

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் புதிய அதிபராக ஏ.ஆதம்பாவா நியமனம்

May 29, 2012 |

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் புதிய அதிபராக கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஏ.ஆதம்பாவா இன்று செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபராக கடமையாற்றிய எம்.எம்.இஸ்மாயில் கடந்த மே 27ஆம் திகதி ஓய்வுபெற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, புதிய அதிபருக்கு பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள்கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களினால் மகத்தான வரவேற்பளித்ததுடன் பதில் அதிபராக கடமையாற்றிய எம்.எஸ்.எம்.ஹம்ஸா தனது பொறுப்புக்களை புதிய அதிபரிடம் கையளித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.ஜவாத், ஏ.எம்.ஜெமீல், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரீ.தௌபீக், கல்லூரியின் முன்னாள் அதிபர்களான ஏ.எம்.ஹுசைன், மர்ஜுனா ஏ காதர் மற்றும் ஏ.பீர்முஹம்மது உட்பட பலர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!