animated gif how to

நோர்வேயில் 77 பேரை கொன்றவன் தன்மீதான குற்றச்சாட்டை மறுக்கிறான்!

April 17, 2012 |


77 பொதுமக்களை கொன்ற சம்பவத்தில் குற்றஞ்சாட்ட நபர், தன்மீது சுமத்தப்பட்டுள்ள 'பயங்கரவாத நடவடிக்கை மற்றும் கூட்டுக் கொலைகளுக்கான' குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார்.

ஆனால் ஆந்தூஸ் பேரிங் பிரேய்விக் குண்டுத்தாக்குதல் நடத்தியதையும் அதன்பின்னர் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

பல கலாச்சாரங்களிலிருந்தும் இஸ்லாத்திலிருந்தும் நார்வேயை பாதுகாப்பதற்காக தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் இன்று திங்கட்கிழமை முதல்நாள் நீதிமன்ற விசாரணையின் போது தெரிவித்தார். குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது எல்லோரும் எப்படி கொல்லப்பட்டார்கள், மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கமளித்தபோது, அதுகுறித்து பிரேய்விக் எவ்வித உணர்வையும் அங்கு வெளிப்படுத்த வில்லை.

இதேவேளை, தன்னை ஒரு புத்தி சுயாதீனம் உள்ளவராகக் காட்டிக்கொள்ளவே பிரேய்விக் விரும்புவதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!