சிங்கள மொழி மூல அல்குர்ஆன் விளக்கவுரை நூல் (தப்ஹீமுல் குர்ஆன்) வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதமர் டி.எம்.ஜயரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஜயந்த செனவிரத்னவும் சிறப்பு பேச்சாளராக பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம.சுக்ரியும் உரை நிகழ்த்தினர்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொது உறவு பகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment