animated gif how to

சகோதரி ரிஸானா மீது கருணை காட்டுங்கள் - பலஸ்தீனர்கள் சவூதி மன்னரிடம் கோரிக்கை

January 26, 2012 |

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சகோதரி ரிஸானா மீது கருணை காட்டுமாறு பலஸ்தீன் - இலங்கை நட்புறவுச் சங்கம் சவூதி அரேபிய நாட்டு மன்னரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பலஸ்தீன் - இலங்கை நட்புறவுச் சங்கத்தின் தலைவர் மஹ்மூத் அப்துல்லாஹ், பலஸ்தீனர்கள் சார்பில் தமது கோரிக்கை அடங்கிய கடிதத்தை சவூதி அரேபியாவுக்கு அனுப்பிவைத்துள்ளார். சிறு குழந்தைகளை பராமரிப்பது தொடர்பில் ரிஸானா எத்தகைய பயிற்சியையும் கொண்டிருக்கவில்லையென அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறையில் 7 வருடங்கள' இருந்துள்ள ரிஸானா, தனது வறிய குடும்பத்தினருக்காக உழைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். எனவே மனித நேயத்தின் அடிப்படையில் ரிஸானாவை விடுவிக்குமாறு அதில் மேலும் கோரப்பட்டுள்ளது.


0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!