animated gif how to

சம்மாந்துறையில் மர்ம மனிதனால் கலவரம்

August 12, 2011 |

August 12, 2011.... AL-IHZAN Local News
-(ஜதுசன், எம்.சி.அன்சார்)  via Tamil Mirror.com-

மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்பட்ட இருவரை சம்மாந்துறை பொலிஸார் காக்க முற்பட்டார்கள் என்பதால் சம்மாந்துறை பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கைலப்பு ஏற்பட்டுள்ளது. பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் மீது சம்மாந்துறை பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள். இச்சம்பவம் இ வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது…
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள கோரக்கோயில் பிரதேசத்தில் பெண்ணொருவர் குளித்துக்கொண்டு இருந்திருக்கிறார். இரவுவேளை என்பதால் அவ்விடத்திற்கு மர்மமான முறையில் வந்த இருவர் அப்பெண்மீது சேஷ்டையில் ஈடுபட்டுள்ளனர். உடனே அப்பெண் கூச்சலிட்டு ஊரைக் கூட்டியதும் அவ்விருவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குள் ஓடி ஒழிந்துள்ளனர். இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேக நபர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு சத்தமிட்டுள்ளனர்...
பொலிஸ் நிலையத்தினை வளைத்து பொது மக்கள் சூழ்ந்து கொண்டதனால் நிலைமையை கட்டுப்படுத்த  விசேட  அதிரடிப்படையினர் மற்றும் அம்பாறை கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கபட்டனர் மக்களை கலைத்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தின் அருகாமையில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களை பொலிஸார் அகற்ற முற்பட்டவேளையில் பொலிஸார் மீது  கல்லெறிகள்  விழுந்துள்ளன. அதையடுத்து பொலிஸார், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலகத்தில் ஈடுபட்டவர்களை அடக்க முற்பட்டிருக்கிறார்கள்.
தற்சமயம் நிலைமை சுமூக நிலைக்குத் திரும்பியுள்ளது. விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சேத விபரம் பற்றி இதுவரை எதுவித தகவலும் வரவில்லை. இதுபற்றி பொலிஸாரும் எதுவித தகவலையும் சொல்ல மறுத்துவிட்டனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!