animated gif how to

23 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

August 18, 2011 |

August 18, 2011.... AL-IHZAN Local News

கொழும்பு மாநகரசபை, கல்முனை மாநகரசபை அடங்கலாக 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஏற்கப்பட உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 17 மாநகர சபைகள் ஒரு நகர சபை மற்றும் 5 பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ளன. தேர்தலுக்காக வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகளில் பிரதான கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதா அரசுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக கூடிய கவனம் கொண்டுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரம் மூலம் அறிய முடிகின்றது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!