animated gif how to

புனித ரமழானில் விரயமாகும் உணவை சேகரிக்க வங்கி

July 31, 2011 |

July 31, 2011.... AL-IHZAN Local News
எதிர்வரும் புனித ரமழான் மாதத்தையிட்டு முஸ்லிம் எயிட் சிறிலங்கா உணவு வங்கி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உணவுகள் விரயமாகுவதை தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் மிஞ்சும் உணவுப் பொருட்களை முஸ்லிம் எயிட் சேகரித்து கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பட்டிணியால் வாடும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு வழங்கவுள்ளது.

பம்பலப்பிட்டியிலுள்ள நிமல் வீதியிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன் உணவு வங்கி நிறுவப்படவுள்ளது. ரமழான் நோன்பு காலங்களில் மாலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை இது திறக்கப்பட்டிருக்கும்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை 0112815024 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புகொண்டு அறிந்துகொளள முடியும்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!