January 05, 2011.... AL-IHZAN World News
M. ஷாமில் முஹம்மட்
எகிப்தில் நேற்றுமுன்தினம் எகிப்திய அலெக்ஸாண்டிரியா நகரில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிற்குஅருகில் புதுவருடபிரார்த்தனைகளுக்காக தேவாலயத்திற்கு வருகை தந்தவர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 21 பேர் கொல்லப்பட்னர்.
இதை யாரும் உரிமைகோரவில்லை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இரு யுவதிகளை அலெக்ஸாண்டிரியா நகரின் கிறிஸ்தவ போலீஸ் சிறையொன்றில் வைத்து சித்திரவதை செய்வதாக தகவல்கள் வெளியாயின இதை தொடர்ந்து இரு யுவதிகளையும் விடுவிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது அந்த நிலையில் முஸ்லிம் யுவதிகளின் சித்திரவதையுடன் தொடர்புடைய கிறிஸ்தவ தேவாலயம் என்று தெரிவிக்கப்பட்ட தேவாலயம் முன்பாக குண்டு வெடித்துள்ளது.
குண்டு வெடிப்பின் பின்னர் தேவாலயத்துக்கு அருகிலுள்ள மஸ்ஜித் ஒன்றினுள் நுழைந்த கிருஸ்தவ கும்பல் மஸ்ஜிதை சேதப் படுத்தியுள்ளது எகிப்திய அரசின் கீழ் தனி கிறிஸ்தவ போலீஸ் படை இயங்குவதாக எகிப்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் நாடுகளான எகிப்து, பாகிஸ்தான், பலஸ்தீன் மேற்கு கரை ஆகிய தேசங்களில் சிறுபான்மையாகவுள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அவதானிக்க படுவதாகவும் அமெரிக்க, மேற்கு நாடுகளுக்கு முற்றிலும் விசுவாசமாகவுள்ள எகிப்தின் ஹுஸ்னி முபாரக், பாகிஸ்தான் சர்தாரி, பலஸ்தீன் அப்பாஸ் ஆகிய மேற்கின் விசுவாசிகளின் சர்வாதிகார மற்றும் பொம்மை நிர்வாகயங்கள் சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எதிராக தொழில்படும் சக்திகளிடமிருந்து கிறிஸ்தவர்களை பாதுகாக்க தவறி வருகின்றது என்று இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
மேற்கின் நலன்களுக்காக இயங்கும் இவர்கள் சிறுபான்மை கிறிஸ்தவர்களையும் , முஸ்லிம்களையும் பாதுகாக்க தவறி வருகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளது, மேற்கு நாடுகளால் பயங்கரவாதிகளாக அடையளப்படுத்தப்படும் காஸா மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஹமாஸ் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் காஸா சிறுபான்மை கிருஸ்தவர்கள் முழு சுதந்திரத்துடன் வாழ்கின்றனர், பயங்கரவாத நாடாக சித்தரிக்கபடும் ஈரானில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் முழுஅளவிலான சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் போராளிகள் கட்டுபாட்டிலுள்ள பல கிராமங்களில் ,சிறியளவில் கிறிஸ்தவர்கள், இந்துகள், சீக்கியர்கள் வாழ்கின்றனர் இவர்களுக்கு பல குறைகள் இருந்தாலும் இவர்கள் அங்குள்ள முஸ்லிம்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை விடவும் ஓரளவு கூடிய சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் ஆனால் அமெரிக்காவின் பொம்மை அதிபராக செயல்படும் கர்சாயின் கட்டுபாட்டு பிரதசங்களில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு சொந்தமான பல வீடுகள் கர்சாயின் ஆட்கள் ஆக்கிரமித்துள்ளனர் இவை பற்றி சிறுபான்மை இன தலைவரான ராவில் சிங்க் பொம்மை அதிபர் கர்சாயியை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் அதிபரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது அதேபோன்று ஈராக்கிலும் இந்த நிலைதான் ஏற்பட்டுவருகின்றது .
மேற்கு நாடுகளின் பொம்மையாக செயல்படும் நாடுகளிந்தான் இந்த வன்முறைகள் நடைபெறுகின்றன மேற்கு நாடுகள் தமது பிடியை இந்த நாடுகளில் இறுக்க பல சதி நாசவேலைகளை செய்துவருவது வழமையான பரகசியம் என்பது குறிபிடத்தக்கது. இந்த குண்டு தாக்குதல்களை பல முன்னணி இஸ்லாமிய அமைப்புகள் கண்டித்துள்ளன, முஸ்லிம்களை ஷியா சுன்னாஹ் என்று பிரித்து இலாபன் கண்டுவரும் மேற்கு மேலாதிக்கம் இன்று முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மோதவிட்டு இலாபம் தேடுகின்றதா ? என பலமான சந்தேகத்தை எழுப்புகின்றது.
0 கருத்துரைகள் :
Post a Comment