December 02, 2010.... AL-IHZAN Local News
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினரான நூர்தீன் மசூர், கொழும்பிலுள்ள தனியார்
மருத்துவமனையொன்றில் இன்றுகாலை மாரடைப்பால்
காலமானதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஹஸன் அலி
தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.48 வயதான நூர்தீன் மசூர் கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு முதற்
தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
2001 ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான அவர் 2001
முதல் 2004 ஆம் ஆண்டுவரை வன்னி புனர்வாழ்வு உதவிகளுக்கான
அமைச்சராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலிலும் அவர் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.
News: tamilmirror.lk
0 கருத்துரைகள் :
Post a Comment