November 08, 2010.... AL-IHZAN Local News
20ஆண்டுகளாக புத்தளம், கொழும்பு, நீர்கொழும்பு, அனுராதபுரம் போன்ற பிரதேசகளில் வாழ்ந்து வரும் 1 1/2 லட்சம் வரையன வடமாகாண முஸ்லிம்களை எதிர்வரும் 14 ம் திகதிக்கு முன்னர் சொந்த இருப்பிடம் திரும்பி தம்மை பதிவு செய்து கொள்ளவேண்டுமெனவும் தவறும் பட்சத்தில் வாக்காளர் இடாபிலிருந்து பெயர்கள் நீக்கப்படும், நிவாரணங்கள் நிறுத்தபடும் என்ற புனர் வாழ்வு அமைச்சின் அறிவிப்பால் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்கள் விசனம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் தேர்தல் ஆணையாளர் தயானந்தா திஸநாயகவுடன் கலந்துரையாடியுள்ளது இதன்போது புனர் வாழ்வு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பை ஏற்றுகொள்ளமுடியது என்றும் சகல வசதிகளுடன் அவர்கள் குடியேற்றப்பட்டதன் பின்னர் தான் பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment