animated gif how to

ஆரியவதி ஆணிகளை தனது உடலில் தானே அடித்துக் கொண்டார்

September 06, 2010 |


சவூதி அரேபியாவில் வேலை செய்த இலங்கைப் பணிப் பெண் ஆரியவதி தாமாகவே உடலில் ஆணிகளையும் ஊசிகளையும் அடித்துக் கொண்டுள்ளதாக மருத்துவரும் ருஹுனு பல்கலைக்கழக விரிவுரையாளருமான சுசிரித் மென்டிஸ் Dr.Susirith Mendis  தெரிவித்துள்ளார். இதன் மூலம் சவூதியில் ஆரியவதி சித்திரவதைகளை அனுபவிக்கவில்லை என்று நான் கூற வரவில்லை என்றும் சவூதி தம்பதிகளிடம் இருந்து தப்பிக் கொள்வதற்காக ஆரியவதி அப்படி நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறி உள்ளார். மருத்துவ வரலாற்றில் ஏனையவர்களின் கவனத்தை ஈர்க்கின்றமைக்காக இம்மாதிரியான சம்பவங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஆரியவதி உளப் பாதிப்புக் காரணமாகவும் இவ்வாறு நடந்திருக்கலாம் மருத்துவர்கள் ஆரியவதியை உள ரீதியாகக பரிசோதிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அரப் நியூஸ் Arab News-பத்திரிகைற்கு வழங்கிய தொலைபேசி பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!