animated gif how to

பாபர் மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு நாளை மாலை 3.30க்கு

September 29, 2010 |

September 29, 2010


அயோத்தி வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்க இருந்த தடை நீக்கப்பட்டு விட்டது. அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வரும் வியாழன் மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என லக்னோ உயர்நீதிமன்ற அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தீர்ப்பின் நகல் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் இணையத்தளத்திலும் அன்று வெளியிடப்படும் என்று தெரிகின்றது.


தீர்ப்பு அன்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வளாகத்தில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். மேலும் உயர்நீதிமறத்திற்கு கட்சிதாரர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. தீர்ப்பை மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!