அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு புதிதாக தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, அமைச்சர்களான சுசில் பிரேமஜேயந்த, றிசாட் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அஸ்வர் ஹாஜியார், ஹசன் அலி, ஹுனைஸ் பாருக், நூர்தீன் மசூர் ஆகியோர் கலந்து கொண்டதை படத்தில் காணலாம்.
இந்நிகழ்வில், டொப் சிமா(TOP CIMA) பரீட்சையில் அகில உலக ரீதியாக அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் தெரிவு செய்யப்பட்ட சிரோமி முஹம்மட் அலிக்கு அமைச்சர் சுசில் பிரேமஜேயந்த நினைவுச்சின்னம் வழங்குவதை படத்தில் காணலம்.
சிரோமி முஹம்மட் அலி கிழக்கு மாகாணத்தின் நிந்தவூரை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)
0 கருத்துரைகள் :
Post a Comment