animated gif how to

சமூக வலைத்தளமான ட்விட்டரில் சவுதி அரேபிய இளவரசர் முதலீடு

December 22, 2011 |

December 23, 2011.... AL-IHZAN World News
சமூக வலைத்தளமான ட்விட்டரில் சவுதி அரேபிய இளவரசர் 300 மில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளார்.
சமூக வலைத்தளமான ட்விட்டர் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகளவில் தற்போது இந்த வலைத்தளத்தை 10 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் பின் அப்துல் அசீஸ் அல்சவுத், ட்விட்டரில் 300 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளதாக அவரது கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏழு மாதங்களாக இருதரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த முதலீடு நடந்துள்ளது. அரபு புரட்சியில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றின.

சிரியாவில் வெளிநாட்டு ஊடகங்கள் நுழையத்தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அந்நாட்டு மக்கள், அங்கு நடப்பதை இந்த இரு வலைத்தளங்களின் வழியாக வெளியுலகுக்கு கொண்டு வருகின்றனர்.


இதுகுறித்து கிங்டம் ஹோல்டிங் நிறுவன இயக்குனர் அகமது ஹலாவானி கூறுகையில், இந்த சமூக வலைத்தளங்கள் வரும் ஆண்டுகளில் ஊடக உலகத்தின் அடிப்படையையே மாற்றி அமைத்து விடும் என நம்புகிறோம் என்றார்.

1 கருத்துரைகள் :

Anonymous said...

ஊடக துரை வெரும் பொய்யையே அரிவிக்கின்றன.எனவே தான் மக்கள் இவ்வாரான சமூக வலைத்தளங்கள் பக்கம் திரும்புகின்றனர்.

Post a Comment

Flag Counter

Free counters!