animated gif how to

அநியாயங்களைத் தவிர்க்க போராடுவது பற்றி பேசவேண்டிய காலகட்டம் இது - ஹக்கீம்

July 30, 2011 |

July 30, 2011.... AL-IHZAN Local News

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த மூன்று தரப்புக்களும் ஒரே மேசையில் ஒன்றாக இருந்து தான் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.

கல்முனை சாஹிறா கல்லூரி தேசியப் பாடசாலையின் க.பொ.த.உயர் தர மாணவர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில், 

கொள்கை வகுப்பில் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் களைவதும் ஒரே மொழி பேசும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அரச கொள்கை வகுப்பின் போது எமக்கு நடக்கும் அநியாயங்களைத் தவிர்ப்பதற்காக... கூட்டாக எப்படிப் போராடுவது என்பது சம்பந்தமாகவும் பேச வேண்டிய கால கட்டம் இதுவாகும். இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் ரீதியாக முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற இயக்கமாகத் திகழ்கின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் முஸ்லிம்களின் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயத்தில் ஓர் தெளிவான நிலைப்பாட்டை நேரடியாக எம்மோடு மாத்திரம் கதைத்துத் தீர்த்துக் கொள்ளலாமென்ற நிலைப்பாட்டிலிருந்தால் அது இக்கால கட்டத்திற்கு ஒவ்வாது எம்மால் ஏற்க முடியாத விடயமுமாகும். மூன்று தரப்புக்களும் ஒரே மேசையில் ஒன்றாக இருந்து பேசித்தான் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதே யதார்த்தமாகும்.

ஏனெனில் இதன் பரிமாணங்கள் வெவ்வேறு கட்டங்களிலுள்ளன. இவை எம்மை மட்டும் பாதிக்கும் விடயங்களல்ல. சில பரிமாணங்கள் ஒவ்வொரு மாவட்ட ரீதியிலும் மாகாண ரீதியிலும் பெரும்பான்மை சமூகத்திற்கும் சில பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. இலகுவில் அவர்கள் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். எனவேதான் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இணைந்து செயற்பட்டாலொழிய இந்த நாட்டில் ஒரு போதும் நிலைத்து நிற்கும் தீர்வை அடைய முடியாது, இதுவே தெளிவான விடயமாகும்.

இப்பொழுதுள்ள போட்டி, கள நிலைவரம் மிக வித்தியாசமானது, உலக சந்தையில் மனித வளத்திற்கு இருக்கின்ற கிராக்கியும், போட்டியிலும் இலங்கையின் மனித வளத்திற்கு இருக்கின்ற சிறப்பையும் பெருமையாக நாம் பேசிக் கொள்கின்றோம்.  எங்கு போனாலும் துறை சார்ந்த பல நிபுணர்கள் எம் சமூகத்திலும் தமிழ் சமூகத்திலுமுள்ளனர். இத்தகையவர்களது அத்தனை திறமைகளும் இந்த நாட்டுக்குத் திரும்பி வர வேண்டும். மூளைசாலிகளின் வெளியேற்றம் பற்றி நாமறிவோம், இவர்களை மீண்டும் இந்த நாட்டுக்கு உள்வாங்குவது எப்படி என்பது பற்றி அரசு சிந்திக்க வேண்டும்.

இந்த நிலையில் தான் அரச ஆட்சேர்ப்புக்கு இன விகிதாசாரமா? இல்லை திறமை அடிப்படையா என்பதில் தெளிவில்லாத நிலையில் நாமுள்ளோம். தேசிய மட்டத்தில் ஒரு கொள்கை, மாகாண மட்டத்தில் இன்னொரு கொள்கை என்று குழப்ப நிலையில் கொள்கை வகுப்பு செய்ய முடியாது. இதேபோன்றே அரசியல் தீர்வு விடயமுமுள்ளது. எனவே இணைந்து செயற்பட்டாலொழிய இந்த நாட்டில் ஒரு நாளும் நிலைத்து நிற்கும் தீர்வை அடைய முடியாது என்றார்.


0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!