March 29, 2011.... AL-IHZAN Local News
வழக்கு விசாரணை, கிரிகெட் விளையாட்டு, மீள் குடியேற்றம் போன்ற காரணங்களால் தேர்தல் திணைக்களத்தினால் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராச்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஜூன் மாதம் நடாத தேர்தல் திணைக்களம் ஏற்பாடுகளை செய்துவருவதாக தெரிவிக்கபடுகின்றது.
இந்த தேர்தலுக்கான பத்திரங்கள் இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணையாளராக புதிதாக பதவி ஏற்றுள்ள மஹிந்த தேசபிரியவினால் கோரப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.நீதிமன்ற வழக்குகள் காரணமாக 64 சபைகளுக்கான தேர்தலும், கிரிகெட் விளையாட்டு காரணமாகவும் மீள் குடியேற்றம் காரணமாகவும் இன்னும் பல சபைகளுக்கான தேர்தலும் ஒத்திவைக்கபட்டது விரிவாக அந்த சபைகளுக்கான தேர்தல்களே எதிர் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது வழக்கு விசாரணையில் உள்ள சபைகளுக்கான நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
News: Lankamuslim
RSS Feed
March 29, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment