March 27, 2011.... AL-IHZAN Local News
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15வது வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது . ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டதுடன், சிறப்பு பேச்சாளராக ஜாமியா நழீமியா பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் கலந்து கொண்டுள்ளார்.
விசேட அதிதிகளாக ஆளுனர் அலவி மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். அஸ்வர், பிரதி அமைச்சர் பஷீர் ஷேகுதாவூத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளார்.
15வது வருட பொதுக்கூட்டமும் செயற்குழுவிற்கான உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பும் இதன்போது இடம்பெற்றுள்ளது இதன்போது போரத்தின் தலைவராக நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் தலைவராகவும் தினக்குரல் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம்.நிலாம் செயலாளராகவும் சுயாதீன ஊடகவியலாளர் முஹம்மட் பாயிஸ் பொருளாளராகவும் ஏகமானதாக தெரிவுசெய்யப்பட்துள்ளனர் அதேவேளை, 15 பேர் கொண்ட நிறைவேற்றுக்குழு தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
News: Lankamuslim
RSS Feed
March 27, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment