January 12, 2011.... AL-IHZAN Local News
இன்று நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அதன் தலைமையகத்தில் இன்று மாலை ஒரு மகாநாட்டை ஏற்பட்டு செய்துள்ளது இந்த மகாநாட்டில் பல இஸ்லாமிய, மற்றும் பொது அமைப்புகளின் பங்குபற்றியுள்ளன.
இந்த மகாநாட்டில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள, ஏற்பட்டு வரும் அனர்த்த நிலையை எதிர்கொள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் வழிகாட்டலில் செயல்படுவதாக தீர்மானிக்கபட்டுள்ளது இதற்கமைய நாடு முழுவதிலுமுள்ள மஸ்ஜிதுகளின் ஊடாக நிவாரண உதவிகளுக்கான வேண்டுகோள் விடுக்கப்படுவதுடன் மஸ்ஜிதுகளின் ஊடாக நிவாரணங்களை சேகரித்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று எமது கொழும்பு lankamuslim.org செய்தியாளர் தெரிவிக்கின்றார் இது தவிர ஏற்கனவே பல முஸ்லிம் அமைப்புகள் கடந்த மூன்று நாட்களாக சமைத்த உணவு, மற்றும் மருத்துவம் என்பன வற்றை வழங்கிவருகின்றது.
0 கருத்துரைகள் :
Post a Comment